தற்போதைய காலக்கட்டத்தில் எண்ணெய் வித்து பயிர்களுக்கு நல்ல விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. உக்ரைன் – ரஷ்யா சண்டையால் இறக்குமதி தடை செய்யப்பட்ட நிலையில் எண்ணெய் வித்துக்களின் தேவை அதிகரித்துள்ளன. எண்ணெய் வித்துகளான நிலக்கடலை, சூரிய காந்தி, ஆமணக்கு சாகுபடியில் மிகவும் எளிதான சாகுபடி எள் பயிர் சாகுபடி. இதற்கு குறைந்த அளவு தண்ணிர் பாசன வசதி போதும். மணற்பாங்கான சத்துகள் குறைந்த நிலத்திலும் சாகுபடி செய்யலாம். அதிக அளவாக உள்ள இந்த கோடை வெப்பத்தையும் தாங்கி வளரும் ஆற்றல் எள் பயிருக்கு உண்டு. சந்தையின் தேவை அறிந்து சாகுபடி செய்ய எற்றது. எள் பயிராகும் மாசி பட்டம், சித்திரை பட்டம் சாகுபடியில் அமோக விளைச்சல் கிடைக்கும். VRI 1, 2, 3 மற்றும் SVPR 2, முக்கிய இரகங்கள் பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்த வேண்டும். நுண்ணூட்ட உரமாக மாங்கனீஸ் சல்பேட் எக்கருக்கு, இரண்டு கிலோ கடைசி உழவில் போட வேண்டும். பயிர் நன்றாக முளைத்து வந்த பின் களை எடுக்க வேண்டும். (களை எடுக்காத பயிர் கால் பயிர் என்பது பழ மொழி). எள் பயிர் காலத்தினை விட இந்த கோடையில் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக இருக்கும். அதிக பூக்கள் காய்கள் பிடிக்க 4 0நாளில் பிளோனேபிக்ஸ் 100 மிலி எக்கருக்கு தெளிக்க வேண்டு்ம். செடிகள் வளர்ச்சி சரிவர இல்லை என்றால் 1 சத டிஏபி கரைசல் தெளிக்கலாம்.
எள் பயிரை தக்க அறுவடை தருணத்தில் அறுவடை செய்து படப்பு போட்டு, 5 நாட்களுக்கு பின் தட்டி எள் விதையை சேகரிக்கலாம்.
எள் சாகுபடி செய்ய இதுவே சிறந்த தருணம். எப்படி?
Spread the love