ஆடு, மாடு வளர்ப்பு போல தற்போது கழுதை வளர்ப்பும் ஒரு தொழிலாக மேற்கொள்ளப்படுவது நமக்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் தரும் தகவலாகும். முன்பு கிராமங்களில் படிக்கின்ற காலத்தில் படிப்பு மண்டையலே ஏறல என்றால் கழுதை மேய்க்காத் தான் லாயக்கு என்பார்கள். ஆனால் இன்று படித்த பட்டதாரிகள் பலருக்கும் சரியான வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், எதாவது தொழில் செய்து வருவாய் ஈட்ட வேண்டிய சூழல் உருவாகி வருகிறது. எந்த தொழிலை செய்யலாம் என்று வழி தெரியாத நிலையில் பலர் உள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்ட இளைஞர் இந்த கழுதை வளர்ப்பை தொழிலாக ஆர்வத்துடன் மேற்கொள்வது பாராட்டத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் 71% கழுதை இனங்கள் ஆழிந்து விட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன, இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் கழுதை பாலின் மகத்துவத்தை கொரானா தாக்கத்தின் போது மக்கள் உணர தொடங்கியுள்ளனர். கழுதை பால் நோய் எதிர்ப்புதிறன் கொண்டதுடன் பல்வேறு சத்துகள், வைட்டமின்கள் உள்ளதாக தெரிகிறது. மருத்துவ குணமுள்ள இந்த பாலில் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்படுவதாக தகவல் உள்ளது. ஒரு கழுதை மூலம் நாள்தோறும் 500 மிலி முதல் 1 லிட்டர் பால் கிடைப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. 1 லிட்டர் பாலின் விலை 7000 முதல் 10000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. அழிந்து வரும் இனங்களை பாதுகாப்போம்,
கழுதை வளர்ப்பு ஓரு சிறப்பு பார்வை

Spread the love