அரியலூர், ஜூன் 15
அரியலூர் மாவட்டத்தில் 1,10,000 எக்டரில் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றிற்கு தேவையான தொழு உரம் மற்றும் இயற்கை உரங்கள் இடாததால் மண்ணின் அங்கக சத்து குறைந்து காணப்படுகிறது. மண்ணின் வளத்தை அதிகரிக்க சணப்பை சாகுபடி செய்து, மடக்கி உழுவது மிகவும் அவசியமாகும். இதற்கு தேவையான சணப்பை விதைகள் உற்பத்தி செய்ய விதை உற்பத்தி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விதை தேவையை பூர்த்தி செய்யலாம்.
சணப்பை விதைப்பிற்கான தொழில்நுட்பங்கள்
நிலத்தேர்வு
முந்தைய பயிர் அதே ரகமாகவோ அல்லது பிற ரகமாகவோ இருக்கக்கூடாது. விதை சான்றளிப்புத் துறையின் செயல்முறைகளுக்கு ஏற்றபடி சான்றளிப்பு செய்யப்பட்டிருப்பின் அதே ரகத்தை பயிரிடலாம்.
பயிர் விலகு தூரம்
ஆதார விதையாக இருப்பின் 250 மீட்டரும், சான்று விதை பதிவாக இருப்பின் 100 மீட்டரும் இருக்க வேண்டும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 30×30 செ.மீ இடைவெளியில் பயிர் சாகுபடி செய்யலாம். ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ வரை விதைப்பு செய்யலாம்.
விதை நேர்த்தி
- ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் கலந்து விதைக்க வேண்டும்.
- ஒரு ஏக்கர் விதைக்கு 2 பாக்கெட் ரைசோபியம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- சணப்பு கடின வகை விதையானதால் சல்பியூரிக் அமிலத்தில் ஒரு கிலோ விதைக்கு 100 மி.லி. என்ற விகிதத்தில் கலந்து 10-20 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
உரமிடல்
ஏக்கருக்கு 4 கிலோ யூரியா, 35 கிலோ டிஏபி மற்றும் 14 கிலோ பொட்டாஷ் அடி உரமாக இட வேண்டும்.
விதைத்த 40 மற்றும் 60-வது நாளில் 10 கிராம் சல்பேட் ஆப் பொட்டாஷ் உரத்தை தெளிக்க வேண்டும் (1% கரைசல்) – பொதுவாக சணப்பு பயிருக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது.
பயிர் பாதுகாப்பு
காய் துளைப்பான் தாக்குதல் காணப்பட்டால் குளோர்பைரிபாஸ் 20% EC 30 மி.லிட்டரை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
அறுவடை
சணப்பு பொதுவாக 150-வது நாளில் அறுவடைக்கு வந்துவிடும். ஒரு ஏக்கருக்கு 160 முதல் 200 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு குவிண்டால் சணப்பு விதை ரூ.5000/- வரை விற்பனையாகின்றது. எனவே, ஒரு ஏக்கரில் சராசரியாக ரூ.8,000/- முதல் ரூ.10,000/- வரை வருமானம் கிடைக்கும்.
விதை சேமிப்பு