புன்செய்புளியம்பட்டி சந்தையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், ரூ.1 கோடிக்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி வாரச்சந்தை புதன், வியாழக்கிழமைகளில் கூடுவது வழக்கம். அதன்படி நேற்று கூடிய சந்தைக்கு, 30 எருமைகள், 200 கலப்பின மாடுகள், 210 ஜெர்சி
மாடுகள், 80 வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க, விவசாயிகள் சந்தையில் குவிந்தனர். எருமைகள், ரூ.16,000 முதல்
ரூ.30,000, கறுப்பு வெள்ளை மாடு, ரூ.22,000 முதல் ரூ.46,000, ஜெர்சி, ரூ.23,000 முதல் ரூ.50,000, சிந்து, ரூ.15,000 முதல் ரூ.39,000, நாட்டுமாடு, ரூ.40,000 முதல் ரூ.72,000, வளர்ப்பு கன்றுகள், ரூ.6,000 முதல்
ரூ.14,000 வரை விற்பனையானது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு
ஒன்று, ரூ.5,500 முதல் ரூ.6,500 வரையும், ஐந்து முதல் 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள், ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை விற்பனையாகின.