கோவை, மே 5
அடுமனைத் தொழில்நுட்பம் பற்றிய இரண்டு நாட்கள் பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வருகிற 09.05.2022 மற்றும் 10.05.2022 தேதிகளில் நடைபெறகிறது.
அடுமனை உணவுப் பொருட்களுக்கு (Bயமநசல Pசடினரஉவள) தற்பொழுது மக்கள் மத்தியில், அதிக வரவேற்பு உள்ளது. அதற்கான முக்கியக் காரணம் விரும்பத்தக்க வகையிலும் பற்சுவைகளிலும் மிக எளிதில் இவை கிடைப்பதேயாகும். வளர்ந்து வரும் இவ்வடுமனைத் தொழில்நுட்பங்கள் சிறுதொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தை[ப் பெருக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே, பயிற்சியின்போது கீழ்க்காணும் அடுமனைப் பொருட்களான,
எ ரொட்டி வகைகள்
எ கேக் மற்றும் பிஸ்கட்
எ பப்ஸ், கட்லெட் மற்றும் சமோசா
எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி நடைபெறும் இடம் – அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்;ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641 003.
இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் மற்றும் ஏனைய ஆர்வலர்கள் ரூ.1,500 ரூ 18% ழுளுகூ செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.