தர்மபுரி, மே 17
தர்மபுரி மாவட்டத்தில் வரும் 20ஆம் தேதி ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது கோரிக்கைகளையும், கருத்துக்களையும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love