சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரம், வேளாண்மை உதவி இயக்குநர் ரா.பத்மாவதி, பயிர் உற்பத்தியில் பூச்சி, நோய் மற்றும் களை மேலாண்மையில் பயிர் பாதுகாப்பு இரசாயனங்களை கையாளும் பொழுது பின்வருவனவற்றை கடைபிடிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
தெளிப்பு கரைசல் தயாரிக்கும் பொழுது
Ø கலங்கலான அல்லது தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்தக்கூடாது.
Ø பாதுகாப்பு கவசங்கள் அணியாமல் தெளிப்பிற்கான கரைசல் தயாரிக்கக் கூடாது.
Ø எந்த ஒரு உடல் பாகத்திலும் தெளிப்புக் கரைசல் படக்கூடாது.
Ø கொள்கலன் லேபிளில் உள்ள குறிப்புகளை தவறாமல் படிக்க வேண்டும்.
Ø தயாரித்த 24 மணி நேரத்திற்கு பிறகு மீதியுள்ள கரைசலை பயன்படுத்தக் கூடாது.
Ø குருணை வடிவ பயிர் பாதுகாப்பு இரசாயனங்களை தண்ணீருடன் கலக்கக்கூடாது.
Ø தெளிப்பான்களை நுகர்ந்து பார்க்கக்கூடாது.
Ø பரந்துரை அளவிற்குமேல் பயிர் பாதுகாப்பு இரசாயனங்களை பயன்படுத்தினால் பயிரின் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.
Ø தெளிப்பு கரைசல் தயாரிக்கும் பொழுது சாப்பிடுதல், குடித்தல், புகை பிடித்தல் மெல்லுதல் போன்ற செய்கைகள் செய்யக் கூடாது.
தெளிப்பு செய்யும் பொழுது
Ø பரிந்துரையை விட அதிகளவு தெளிப்பு செய்யக்கூடாது.
Ø அதிகளவு வெயில் உள்ள நேரம் மற்றும் வேகமாக காற்றடிக்கும் நேரத்தில் தெளிப்பு செய்யக்கூடாது.
Ø மழை பெய்யும் நேரத்திற்கு முன்பு அல்லது மழை பெய்து ஓய்ந்தவுடன் உடனடியாக தெளிப்பு செய்யக்கூடாது.
Ø கூழ்ம அடர்வு (EC formulations) உள்ள பூச்சிக் கொல்லிகளை, பேட்டரி மூலம் இயங்கும் தெளிப்பான் கொண்டு தெளிப்பு செய்யக்கூடாது.
Ø காற்றடிக்கும் திசைக்கு எதிரான திசையில் தெளிப்பு செய்யக்கூடாது.
Ø தெளிப்பு கரைசல் தயாரிக்க பயன்படுத்திய பாத்திரம், வாளிகள் ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்திருந்தாலும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது.
Ø பாதுகாப்பு கவசங்கள் /உடைகள் அணிந்து தெளிப்பு செய்ய வேண்டும்.
தெளிப்பு செய்த பிறகு
Ø மீதியுள்ள கரைசலை தண்ணீர்போகும் வாய்க்கால், குளம், குட்டை ஆகியவற்றில் ஊற்றக்கூடாது.
Ø காலி கொள்கலன்களை வேறு பொருட்களை இருப்பு வைக்க எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக்கூடாது.
Ø தெளிப்புக்கு பின் குளிக்காமல் துணிகளையும் அலசிடாமல் சாப்பிடக் கூடாது. புகை பிடிக்க கூடாது.