சிவகங்கை, ஜூன் 8
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு மருந்துகளை கையாளும் முறைகள் குறித்த உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி கிளாதரி கிராமத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டு வரவேற்புரை வழங்கினார். திருப்புவனம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சு.சுந்தரமகாலிங்கம், வரவேற்புரை வழங்கி திருப்புவனம் வட்டாரத்தில் கோடையில் நெல் சாகுபடிக்கு பதிலாக பயறு வகை சாகுபடி செய்து விதை பண்ணை அமைக்க கூறினார். கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும் அதன் பயன்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். தொழில்நுட்ப உரையாற்றிய விஜயகுமார், அக்ரி கிளினிக் பயிர் பாதுகாப்பு மருந்துகளை கையாளும் முறைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். திருப்புவனம் உதவி வேளாண்மை அலுவலர் கரும்புசெல்வம், வேளாண் இடுபொருட்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, நுண்ணூட்ட உரம் அதன் பயன்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். திருப்புவனம் வட்டார அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் அன்பழகன் கலந்து கொண்டு நன்றி கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகபிரியா பயிற்சிக்கான முன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Spread the love