மும்பை, மே 3
மியூச்சுவல் பண்ட்களில், எஸ்ஐபி எனப்படும் சீரான முதலீடு வாய்ப்பு மூலம் முதலீடு செய்யப்படும் தொகை, இந்த ஆண்டு மார்ச் மாதம், 22 சதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
எஸ்ஐபி முறையில், மியூச்சுவல் பண்ட்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட தொகையை சீராக முதலீடு செய்யலாம். இந்த ஆண்டு மார்ச் மாத காலத்தில் இந்த முறையில், ரூ.9,182 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இது, ரூ.7,528 கோடியாக இருந்தது. மேலும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலீடு செய்யப்பட்ட அதிகபட்ச தொகை, ரூ.7,528 கோடியை விட இது அதிகமாகும். கடந்த இரண்டு மாதங்களில், எஸ்ஐபி முதலீடு கணிசமாக உயர்ந்துள்ளது.
பங்குச்சந்தையின் செயல்பாடு, வைப்பு நிதி உள்ளிட்ட முதலீடுகள் அளிக்கும் பலன் குறைவு ஆகியவை இதற்கான காரணமாக கருதப்படுகிறது. பிஎப் சேமிப்பில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு வரி பிடித்தம் செய்யப்படுவதற்கான வரம்பு நிர்ணயமும், மியூச்சுவல் பண்ட் முதலீடு அதிகரிக்க காரணமாக கருதப்படுகிறது. மேலும், சராசரி முதலீட்டாளர்களில் பலர், எஸ்ஐபி வழியை நாடத் துவங்கியிருப்பதாகவும் கருதப்படுகிறது.