நாமக்கல், ஜூன் 11
பரமத்தி வேலூர் பகுதிகளில் வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர தினந்தோறும் நடைபெறும் வாழைத்தார் ஏல சந்தைக்கு வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.500க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.350க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250க்கும், கற்பூரவள்ளி தார் ஒன்று ரூ.350க்கும் மொந்தன் காய் ஒன்று ரூ.5க்கும் விற்பனையானது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.400க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300க்கும், கற்பூரவள்ளி அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.450க்கும், மொந்தன் காய் ஒன்று ரூ.6க்கும் விற்பனையானது. வாழைத்தார்கள் வரத்து குறைந்ததால் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Spread the love