சென்னை, ஏப்.22
வளிமண்டல சுழற்சி காரணமாக, வரும், 25ம் தேதி வரை, பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தென் மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில்
வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், வரும், 25ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று மிதமான மழைக்கு
வாய்ப்புள்ளது.
தமிழகத்தில், அதிகபட்சமாக, திருச்சியில், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், 39; நாமக்கல், சேலம், திருத்தணி, 38 டிகிரி செல்ஷியஸ்
வெப்பநிலை பதிவானது. அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்தியுள்ளது. அதேநேரம், சென்னையில் விமான நிலையம், 36; நுங்கம்பாக்கத்தில், 35 டிகிரி செல்ஷியஸ்
வெப்பநிலை பதிவானது. மேலும் பெரும்பாலான பகுதிகளில், ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசியதால், அதிக புழுக்கம் காணப்படவில்லை. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில்
எட்டயபுரம், 3; தர்மபுரி, ஏலகிரி, 2 செ.மீ., மழை பெய்துள்ளது.