விராலி காம்புள்ள மேல் நோக்கிய இலைகளையும் சிறகுள்ள விதைகளையும் கசப்பான பட்டையும் கொண்ட குறுஞ்செடி இலை பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. காய்ச்சல் தணித்தல், உடல் உரமாக்கல், வீக்கம் கட்டிகளைக் கரைத்தல், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல் ஆகிய மருத்துவ குணமுடையவை. 20 கிராம் விராலி இலையை இடித்துக் கால் லிட்டர் நீரிலிட்டு ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 20 மில்லி பால் கலந்து சாப்பிட்டு வர நுரையீரல் நோய்கள் இருமல் சளி ஆகியவை தீரும். இலையை வதக்கிக் கட்டிகள் மீது கனமாக வைத்துக்கட்டி வரக் கட்டி அமுங்கி விடும் அல்லது உடைந்து விரைவில் ஆறும், வீக்கம் குறையும். விராலி பட்டையை உலர்த்தி பொடித்து ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டு வர சளி சளிக் காய்ச்சல் முறை காய்ச்சல் மலேரியா முதலிய நோய்கள் தீரும். பட்டையை அரைத்து பற்றிட வீக்கங்கள் விரைவில் கரையும்.
விராலி

Spread the love