விழுப்புரம், ம 6
திருச்சி, விதைப்பரிசோதனை நிலைய விதைப்பரிசோதனை அலுவலர் து.மனோன்மணி, 06.05.2022 அன்று விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலையத்தின் பணிகள் குறித்து திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.
விழுப்புரம், விதைப்பரிசோதனை நிலையத்திற்கு வரப்பெறும் விதை மாதிரிகளில் விதைகளின் முளைப்புத்திறன் சோதனை, ஈரப்பத சோதனை, புறத்தூய்மை சோதனை மற்றும் பிற ரக கலப்பு விதைகளை கண்டறியும் சோதனை முறைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக சான்றுவிதை மாதிரிகளில் பிற ரக கலவன்கள் சரியான முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது என்பதை உறுதி செய்தார். சான்று விதை மாதிரி 139 என்ற ஆய்வக எண் கொண்ட நெல் விதை மாதிரியில் உள்ள பிறரக கலவன்களை மறு ஆய்வு செய்து பிற ரககலவன்கள் உள்ளதென உறுதிப்படுத்தினார்.
விதைப்பரிசோதனை தொடர்பான அனைத்து பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் விதைப்பரிசோதனை நிலையத்தில் பகுப்பாய்வு செய்திட பயன்படுத்தப்படும் உபகரணங்களின் செயல்பாடு குறித்த செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலையத்தில் இதுவரை சான்று விதை மாதிரிகள் 174 எண்களும், ஆய்வாளர் விதை மாதிரிகள் 48 எண்களும், பணி விதை மாதிரிகள் 82 எண்களும், ஆக மொத்தம் 260 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதில் 25 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன. அவை தரமற்றவை தான் என்பதனை மீண்டும் ஆய்வு செய்து உறுதி செய்தார். பரிந்துரைக்கப்பட்ட அளவிலான புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் மற்றும் பிற ரக கலவன்களின்றி உள்ள விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வதே விதைப்பரிசோதனை நிலையத்தின் முக்கிய நோக்கம் என்பதை வலியுறுத்தினார். மேலும் பெறப்படும் விதை மாதிரிகளை உரிய நேரத்தில் பரிசோதனை செய்து வழங்குமாறு விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலருக்கு அறிவுரை வழங்கினார்.